66
யாப்பருங்கலம்
குருகு நாரையொடு 'கொட்பானா
விரிதிரை நீர் வியன்கழனி
மறுகெழீஇய மலிசும்மை
எனவாங்கு,
தண்பணை தழீஇய இருக்கை
மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே”
எனவும்,
3“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
எனவாங்கு,
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே
―
155
திருப்பாமாலை. -யா. கா. 11. 21. மேற்
எனவும் மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. 4"செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே”
எனவும்,
599
'திருந்திலையி னிலங்குவேற் றிகழ்தண்டார்க் கதக்கண்ணன் விரிந்திலங்கு வெண்குடைக்கீழ் வேந்தட்ட வியன்களத்து முரிந்திரைஞ்சி முத்துரைக்கு முடியெல்லாம் தத்துந்தம் அருந்திறன்மா மறமன்னர்க் கழுவனவே போன்றனவே
وو
எனவும் நான்கடியாற் கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.
"இச்சூத்திரத்துள் 'வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி' என்று முறையிற் கூறாது, "வெண்பா ஆசிரியம் வஞ்சி' என்று தலை தடுமாற்றம் தந்து புணர்ந்துரைத்தல் வேண்டியது என்னை?” எனின், 'பெருமைக்கெல்லை, பாடுவோனது பொருள் முடியும் குறிப்பே; வரையறை இல்லை,' என்பாரும்; அடி வரையறுத்துச் சொல்லுவாரும் என இருதிறத்தார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு என்க. நூல்நயம் அறிவார். ஆயுங்கால், வேறுபாடு இல்லை என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது. 'யாதோ வேறுபாடு இல்லாதவாறு?' எனின், 'பெருமைக்கு எல்லை, பாடுவானது பொருள் முடிவு குறிப்பே; 1. ஆடுதல். 2. ஒலி. 3. தென்றற் காற்று.
4.
5.
இதனைச் சூளாமணிச் செய்யுள் என்பர். (தக்கயாகப்பரணி விசேடக் குறிப்பு 5) இதனையும் சூளாமணிச் செய்யுள் என்பர். (இ.ப )