186
வரலாறு :
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
(நேரிசை ஆசிரியப்பா)
66
வளரிளங் கொங்கை வான்கெழு மருப்பே;
பொறிவண் டோதியிற் பாடுமா மருளே; வாணுதல் ஒண்மதி மருட்டும்
மாயோள் இவளென் நோய்தணி மருந்தே”
இஃது அடிதோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கடைமோனை.
(கலிநிலைத் துறை)
“சுரிதரு மென்குழல் மேலும் மாலைகள் சூட்டினீர்; புரிமணி மேகலை யாளை ஆரமும் பூட்டினீர்;
அரிதவழ் வேனெடுங் கண்களும் அஞ்சனம் ஊட்டினீர்; வரிவளை பெய்திளை யாளை நுண்ணிடை வாட்டினீர்'
இஃது அடிதோறும் கடைச்சீர்க்கண் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கடை எதுகை.
(நேரிசை ஆசிரியப்பா)
1“கயல்மலைப் பன்ன கண்ணிணை கரிதே;
தடமுலைத் *தவழும் தனிவடம் வெளிதே; நூலினும் நுண்ணிடை சிறிதே;
2ஆடமைத் தோளிக் கல்குலோ பெரிதே’
கடைச்சீர்
யா. கா. 40. மேற். மறுதலைப்படத்
தொடுத்தமையால், கடை முரண்.
இஃது அடிதோறும்
(நேரிசை ஆசிரியப்பா)
"மாமலர் நெடுங்கண் மானோக் கினவே;
பொன்மலர் வேங்கை புணர்முலைச் சுணங்கே;
நறுமலர்க் கூந்தலும் 3அறலே”
ஒண்மலர்க் கமலம் அலைத்தது முகமே
6
எனவும்,
(குறள் வெண்பா)
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்?”
எனவும்,
1.
கெண்டைமீன் போரிடல். 2. அசையும் மூங்கில். 3. கரு மணல்.
(பா. வே) *திவளும்.
திருக்குறள். 228