யாப்பருங்கலம்
(வெண்டாழிசை)
“போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான்
தாதார் மலரடியைத் 'தணவாது வணங்குவார்
தீதார் வினைகெடுப்பார் சிறந்து"
283
―
யா.வி.15.மேற்.
இது வெள்ளோசை தழுவாது, வேற்றுத்தளை விரவி, முதற்கண் வெண்டளை தட்டு வந்தமையான், "வெண்டாழிசை' எனப்படும்.
- 66
(வெண்டாழிசை)
'நன்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று *முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்’
யா. வி. 15. மேற்.
-யா. கா. 27. மேற்.
ஃது ஆசிரியத்தளையான் வந்த வெண்டாழிசை.
(வெண்டாழிசை)
“சீர்கொண்ட கருங்கடலிற் றிரைமுகந்து வலனேந்திக் கார்வந்த ததனோடும் கமழ்குழலாய் ! நிற்பிரிந்தார் தேர்வந்த திதுகாணாய் சிறந்து”
இது கலித்தளையான் வந்த வெண்டாழிசை.
66
(வெண்டாழிசை)
முழங்குகடல் முகந்த மூரிக் கொண்மூத் தழங்குகுரல் முரசிற் றலைசிறந் ததிர்ந்து வழங்கின இவை காணாய் வந்து"
ாழிசை,பிறவும்
இது வஞ்சித்தளையான் வந்த வெண்டாழிசை, பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
"வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, பிறவும் வந்த
வழிக் கண்டு கொள்க.
'வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை' என்றவற்றை வேறுபடாதே வெள்ளொத்தாழிசையே என்று வழங்கவும் அமையும்.
66
“தன்பா அடித்தொகை மூன்றாய் இறும்படி வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின் தண்பா இனங்களிற் றாழிசையாகும்.
என்றார் காக்கைபாடினியார்.
1. விலகாது. (பா.வே) *நண்பி. *முனிவு.