66
யாப்பருங்கலம்
(நேரிசை ஆசிரியப்பா)
“நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் ‘தேந்தழை இவை,’ எனக் காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப் பூண்முலை நோக்கி இறைஞ்சி
வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை " ஃது ‘ஐ’ என்று இற்ற ஆசிரியம்.
293
'என்' என்னும் அசைச்சொல் ஆசிரியத்துள் அருகியன்றி வாராது, வரினும், சிறப்பிலது எனக் கொள்க.
66
தன்பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க் கன்பா வறைந்த ஆசிரியம் என்ப
என்று ஓசை சொல்லி,
“ஏயெனச் சொல்லின் ஆசிரியம் இறுமே; *ஓஆய் என ஒரோவழி ஆகும்’
66
'என்னென் சொல்லும் பிறவும் ஒன்றித் துன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே என்று ஈறு சொன்னார் அவிநயனார். “இயற்சீர்த் தாகியும், அயற்சீர் விரவியும், தன்றளை தழுவியும், பிறதளை தட்டும், அகவல் ஓசைய தாசிரி யம்மே
என்று ஓசை சொல்லி,
“ஏயென் றிறுவ தாசிரியத் தியல்பே; ஓய் இறுதியும் உரியவா சிரியம்
“நின்ற தாதி நிலைமண் டிலத்துள்
என்றும் என்னென் றிறுதிவரை வின்றே"
“அல்லா ஒற்றும் அகவலின் இறுதி
நில்லா அல்ல; நிற்பன வரையார்
என்று ஈறு சொன்னார் நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (மயேச்சுரர்)
ஈ என்றும் ஐ என்றும் இறும் என்று இவர்கள் சொற்றிலரால் எனின், இவர்களும் இலேசு எச்சு உம்மை விதப்புக்களால் உடம்பட்டார்; இந்நூலுடையார் எடுத்து ஓதினார். இது வேற்றுமை.
“அகவல் ஓசை ஆசிரி யம்மே
99
என்று பிறரும் சொன்னார் எனக் கொள்க.
- (பா. வே) ஓஆஈஐயும்.
(கசு)