336
66
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
"துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடனகலப் புணையில்லா உயிர்கட்குப் *பொருவில்லா அருளினால்
இணையில்லா *இயலொழுக்கம் இசைத்ததுநின் இறைமையோ? இவை தாழிசை.
66
"அருள்புரி திருமொழி அமரரும் அரசரும்
மருள்வழி மனிதரும் மகிழ்வுற இயம்பினை.
இஃது அராகம்.
“பூமலர் 'துதைந்த பொழிலணி கொழுநிழற் றேமலர் அசோகினை; தூமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை.
வை பேரெண்.
266
66
காமரு கதிர்மதி முகத்தினை;
"சாமரை இடையிடை மகிழ்ந்தனை; ‘தாமரை மலர்புரை அடியினை;
66
66
'தாமரை மலர்மிசை ஒதுங்கினை.
வை இடையெண்.
அதிசயம் நீ ; பொருளினை நீ; உயர்வினை நீ;
66
‘அறிவினை நீ ;
அருளினை நீ ;
உறுவனை நீ ;
உலகினை நீ;
அலகினை நீ;
இவை சிற்றெண்.
எனவாங்கு,
து தனிச்சொல்.
“இனைய ஆதலின் முனைவருள் முனைவ ! நினையுங் காலை நின்னடி அடைதும்
ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து
துன்னிய தீவினைத் துகள்தீர்
முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே”
து சுரிதகம்.
இஃது இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி.
கடையளவு அம்போ தரங்க ஒத்தாழிசை கலிப்பாப் பெருந்தேவ பாணி வருமாறு:
1. செறித்த. 2. விரும்பத்தக்க. (பா.வே) *பொருளில்லா. *நல்லொழுக்கம்.