380
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
திறமல்கிய தேனினமுமாய்,
அதனால்,
மொய்மலர் துவன்றிய தேம்பாய்
மலரடி இணைய வைத்தவா மனனே!'
என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா.
“பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை *மீன்றிரிதர
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
நாளும்,
மகிழும் மகிழ்தூங் கூரன்
`புகழ்தல் ஆனாப் பெருவன் மையனே’’
யா. வி. 9. 15. 21. மேற்.
யா. கா. 9. 34. மேற்.
என்பது, ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி
வஞ்சிப்பா
66
“பானல்வாய்த் தேன்விரிந்தன;
கானல்வாய்க் *கழிமணந்தன ;
ஞாழலொடு நறும்புன்னை
தாழையொடு முருகுயிர்ப்ப,
வண்டல்வாய் நறுநெய்தல்
கண்டலொடு கடலுடுத்துத்
தவளமுத்தம் சங்கீன்று
பவளமொடு ஞெமர்ந்துரா அய்
இன்னதோர்
66
கடிமண முன்றிலும் உடைத்தே
படுமீன் பரதவர் பட்டினந் தானே”
து அகவற் றூங்கல் குறளடி வஞ்சிப்பா.
"தொடியுடைய தோண்மணந்தனன்;
கடிகாவிற் பூச்சூடினன்;
- நறைகமழுஞ் சாந்தநீவினன்;
செற்றோரை வழிதபுத்தனன் ;
நட்டோரை உயர்வு கூறினன்;
1. புகழ்ச்சிக்கு அடங்காத. (பா. வே) *மீன்றிரிதரும். *கழிமலர்ந்தன. *தண்கமழும்.