யாப்பருங்கலம்
379
இ.ள்) தூங்கல் ஓசையைத் தமக்கு ஒசையாக உடையன வஞ்சிப்பாக்கள். அவை, தனிச்சொல்லோடு புணர்ந்து, ஆசிரியர் சுரிதகத்தால் இறும் என்றவாறு.
66
"தூங்கல் இசையன வஞ்சி;
ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே"
என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; ‘மற்றவை' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?
766
2 ஏந்திசைத் தூங்கலும், அகவற்
றூங்கலும், 3பிரிந்திசைத் தூங்கலும் என மூன்று வகைப்படும் தூங்கல் ஓசை,' என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.
இரண்டு வஞ்சிப்பாவினையும் பதினான்கு தளையானும் உறழ, இருபத்தெட்டாம் ; ஓசையும் தளையும் கூட்டி உறழ, எண்பத்து நான்காம் எனக் கொள்க.
66
'தூங்கல் இசையன வஞ்சி ; மற்றவை தனிச்சொலோ டகவலின் இறுமே
என்னாது, ‘ஆய்ந்த’ என்று மிகுத்துச் சொல்லியது, ஒரு சாரார் வேற்றடி விரவாத வஞ்சிப்பாக்களை இன்னியல் வஞ்சிப்பா எனவும் வேற்றடி விரவி வந்த வஞ்சிப்பாக்களை *விரவியல் வஞ்சிப்பா எனவும், வேண்டுவர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்
து.
இவ்விரண்டு வஞ்சிப்பாவினையும் இவ்விரு பெயரானும் கூறுபடுப்ப, நான்காம் ; இன்னியற் குறளடி வஞ்சிப்பா, விரவியற் குறளடி வஞ்சிப்பா, இன்னியற் சிந்தடி வஞ்சிப்பா, விரவியற் சிந்தடி வஞ்சிப்பா என. இவை மூன்று தூங்கல் ஓசையானும் உறழப், பன்னிரண்டாம்; அவை பதினாலு தளை யாலும் கூறுபடுப்ப, ஐம்பத்தாறாம்; ஓசையும் தளையும் கூட்டி உறழ, நுற்றறுபத் தெட்டாம்; பிறவகையாலும் விகற்பிக்கப் பலவுமாம் எனக் கொள்க.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
(குறளடி வஞ்சிப்பா)
“பார்பரவிய பருவரைத்தாய்க் கார்கவினிய கதழொளியாய்
நீர்மல்கிய நீண்மலரவாய்த்
1. ஒன்றிய வஞ்சித்தளையே வருவது ஏந்திசைத் தூங்கல்
2. ஒன்றாத வஞ்சித்தளையே வருவது அகவல் தூங்கிசை.
3. இவ்விரு தளைகளும் பிறதளைகளும் மயங்கிவருவது பிரிந்திசைத் தூங்கல்.