உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

23

ல்லை. சான்றாக, 'அணிமலர் அசோகின்” “பொன்னின் அன்ன” என்னும் இரண்டு பாடல்களும் விருத்தியுரையாசிரியர் செய்தனவாகலாம் என இலக்கிய வரலாறு கூறுகின்றது. ஆனால், அவை அவரால் செய்யப்பெற்றன அல்ல என்பதற்குச் சான்றுளது.

இவ்விரண்டு பாடல்களும் யாப்பருங்கலக் காரிகையிலும் எடுத்துக் காட்டாக வந்துள. அவற்றைக் காரிகை உரையாசிரியர் கட்டாயத்தால் காட்டுகின்றார் என்றே கொள்ளவேண்டும். ஏனெனில் அப்பாடலை, நூலியற்றிய அமிதசாகரரோ அவ் விலக்கணத்திற்கு இலக்கியமாகப் 'பாடி வைத்துள்ளார். ஆதலால், அவருக்கு முன்னிருந்தவரோ உடனிருந்தவரோ இயற்றியதாதல் வேண்டும். அவ்வாறாக அப்பாடலை உரையாசிரியர் இயற்றி வைத்தார் என்பது பொருந்தவில்லை அல்லவா!

அமிதசாகரர் காரிகையில் 2உதாரண முதனினைப்புக் களாக 7 பாடல்கள் இயற்றியுள்ளார். அப்பாடல்களில் 43 பாடல்களின் முதல்குறிப்புக்கள் உள்ளன. அவர் காட்டியுள்ள முதற்குறிப்புடைய பாடல்கள் அவர்காலந் தொட்டோ, அவர்க்கு முன்தொட்டோ வழக்கில் இருந்தவை என்பதில் ஐயமில்லை. அன்றியும் அவர்க்கு முன்னே விளங்கிய இலக்கண ஆசிரியர்களுள் சிலரும் உதாரண முதனினைப்புக்களைக் காட்டிச் சென்றுள்ளனர் என்பது அறியத்தக்கதாம்.

"காரிகை, மயேச்சுரர் மயேச்சுரர் யாப்பேபோல உதாரணம் எடுத்தோதுவது” என்றும் (காரிகை. 1. உரை) “இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும் உளரெனக்

கொள்க. என்னை?

1.

2.

“மோனை விகற்பம் ‘அணிமலர்’ மொய்த்துட னாமியைபிற் (கு) ஏனை எதுகைக்(கு) இனம் பொன்னின் அன்ன இனிமுரணிற்(கு) ஆன விகற்பமும் சீறடிப் பேர(து) அளபெடையின் தான விகற்பமும் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே '

என்பது தொடைவிகற்பங்களுக்கு அமிதசாகரர் காட்டும் உதாரண முதனினைப்புப் பாட்டு (காரிகை. 20)

காரிகையில் அமிதசாகரரால் பாடப்பெற்ற 7 பாடல்களும் 22 ஆம் காரிகையுடன் அமைகின்றன. அதற்குமேல் வரும் உதாரண முதனினைப்புப் பாடல்கள் 11 உம் உரைச்சூத்திரங்கள். அவை உரையாசிரியரால் யாக்கப் பெற்றவை. நூலாசிரியர் முதற்கண் நூலையியற்றி உதாரண முதனினைப்புக்களைப்பின்னே சேர்த்திருக்கவேண்டும். இயற்கைப் பரிவாலோ யாதானுமோர் காரணத்தாலோ ஆசிரியரால் நிறைவு செய்யப் பெறாமல் உரையாசிரியர்கள் நிறைவு செய்யப் பெற்றிருக்க வேண்டும்!