436
வரலாறு:
66
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
(நேரிசை வெண்பா)
கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா;
கூடலிற் கூடலே கூடலும் ;- கூடல் அரும்பிய முல்லை அரும்பவிழு மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு’
எனக் கொள்க.
இலக். விளக். 757. மேற்.
உருட்டு வண்ணம் என்பது, அராகத் தொடைமேல்
வருவது. என்னை?
“உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்”
என்றாராகலின்.
—
தொல். செய். 230.
வரலாறு:
66
(வண்ணக ஒருபோகு)
(அராகம்)
'அணிகிளர் சிறுபொறி அவிர் துத்தி மாநாகத் தெருத்தேறி துணியிரும் பனிமுந்நீர் *தொட்டுழந்து மலைந்தனையே; ஆர்கலி உயரகல் எழில்வானத் தமரர்கணம் உடனார்ப்ப *வார்புனல் இகன்மிகல மறமல்லனை மாய்க்கலிற் பொங்கினை; முள்ளெயிற் றரிமருள்கண் ஆய்த்தியரொடு நிரைநடுங்க வரைதிரள் நிமிர்தடக் கையினனி மலையெடுத் தேந்தினை;
இஃதராகம்.
காமருதகைய கல்லியல் மார்பினை:
கண்பொரு சுடரொளி நேமியை;
பூமலி வினைபுனை தாரினை;
பொன்புனை வினைபுனை உடுக்கையை;
இது பேரெண்.
அனையன.
இது தனிச்சொல்.
பலவுடன் புகழ்தகப் பயந்தோய் ! நின் இணைபுணர் கழலடி பரவுதும்
துணைபுணர் உவகையொடு மன்னுதும் எனவே” - யா. வி. 93. மேற்.
இது சுரிதகம்.
எனக் கொள்க.
(பா. வே) *தோட்டவிழ்ந்து மலர்ந்தனையே. *வார்புகல் கழன்மறவர்.