486
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
“கணவிரி பூமருது கார்க்கடி யாறு
விறகுதீ நான்கெழுத்தும் ஆகும் ;-குறைவில் மழகளிறும் அன்ன தகைத்து
என்பவாகலின்.
அவற்றுள்,
பூமருது
ஏழெழுத்தடி
முதலாகப்
பத்
தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த பதின்மூன்று அடியும்
பெற பதின்மூன்றேயாம்.
என்னை?
(குறள் வெண்பா)
“பூமரு தேழாதி பத்தொன்பான் காறுயர ஆகும் அடிபதின்மூன் றாம்'
என்பவாகலின்.
99
ஒழிந்த கணவிரி, கடியாறு, மழகளிறு, விறகுதீ, என்னும் நான்கு சீரும் எட்டெழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற, நான்கு மாய் நாற்பத்தெட்டு அடியாம்.
என்னை?
(குறள் வெண்பா)
66
ஒழிந்தநான் கெட்டாதி பத்தொன்பான் காறும் மொழிந்த அடிநாற்பத் தெட்டு”
என்பவாகலின்.
முன் சொன்ன பூமருது பெற்ற பதின்மூன்றும், இவை நாற்பத்தெட்டும் கூடி நான்கெழுத்துச் சீராய வழி, ஆசிரிய அடித்தொகை அறுபத்தொன்று.
என்னை?
(குறள் வெண்பா)
“நாட்டிய நாலெழுத்துச் சீரால் அடித்தொகை
கூட்டி அறுபதின்மேல் ஒன்று
என்பவாகலின்.
""
இனி ஐந்தெழுத்துச் சீராவது ‘மழகளிறு' என்பது. அதுதான், ஒன்பது எழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பன்னிரண்டு அடியும் பெறுவது.
என்னை?