யாப்பருங்கலம்
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே’
என்றார் பல்காயனார்.
99
41
இவற்றை இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குப. அவற்றுள் காரணக்குறியான் வழங்குமாறு:
“எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து
அசைத்திசை கோடலின் அசையே; அசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே; சீரிரண்டு
- தட்டு நிற்றலிற் றளையே; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடியிரண்டு
- தொடுத்தல் முதலாயின தொடையே; அத்தொடை
- தூக்கில் தொடர்ந் திசைத்தலின் தூக்கெனப் படுமே”
என்றான் ஆசிரியர் எனக் கொள்க.
யா. கா. 1. மேற்.
இவை இம்முறையே வைத்ததற்கு என்னையோ காரணம்?” எனின், எழுத்து எல்லா உறுப்புக்கும் முதற்காரணம் ஆதலின், சிறப்புடைத்து என்று முன் வைத்தார். என்னை?
“சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்’
என்பது தந்திர உத்தி ஆகலான். எழுத்தின் பின்னர் அசை வைத்தார், அசை எழுத்தினான் ஆமாகலின். அசையின் பின்னர்ச்சீர் வைத்தார். சீர் அசையினான் ஆமாகலின். சீரின் பின்னர் தளை வைத்தார் தளை சீரினான் ஆமாகலின் தளையின் பின்னர் அடி வைத்தார், அடி தளையினான் ஆமாகலின். அடியின் பின்னர்த் தொடை வைத்தார், தொடை அடியினான் ஆகமாலின். தொடையின் பின்னர்த் தூக்கு வைத்தார், தூக்குத் தொடையினான் ஆமாகலின். 'தூக்கு' எனினும்? 'பாட்டு எனினும், 'பா’ எனினும் ஒக்கும். என்னை?
- “தூக்கும் பாட்டும் பாவும் ஒன்றென நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”
என்றார் பல்காயனார் ஆகலானும்,
(பா. வே) *தட்டுற. *தொடுத்துமன் சேறலின். *“பாவி நடத்தலில் பாவே; பாவொத்து இனமாய் நடத்தலின் இனமெனப் படுமே” “தூங்கித் தொடர்ந்' தென்பதூஉம் பாடம். தூக்கி *“யாப்பும் பாட்டும் தூக்கும் தொடர்பும்
செய்யுளைநோக் கிற்றென்ப நுணங்கி யோரே”
செறிந்து - புறம், 126.
- யாப். கா. 1.