உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ் வளம்

16

ஓதுவது ஒழியேல் ஓதாமல் ஒருநாளும் இருக்க

வேண்டா’ ‘நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்' என்பவை நாம் அறியாதவையோ? 'பாடம் ஏறினும் பாடை ஏறினும் - ஏடது கைவிடேல்' என்பது புதுவதோ? பொது அறிவினார்க்குப் பல்கால் ஓதி அழுந்தப் பதித்து வைத்தால்தான் பதிவாகி நிற்கும்! ஆனால் கருவிலே திருவுடையார்க்கு ஒருகால் கேட்ட -படித்த - அளவானே அழுந்தப் பதிவாகி விடும். அவர்கள் பொது மக்களெனப் பல்கால் வருந்திப் பயில வேண்டுவதில்லையாம். ஆகலின், அவர்கள் கற்ற கல்வி ‘ஓதாக் கல்வி' என்னும் ஒரு பெருஞ் சிறப்புக்குரிய தாயிற்றாம்.

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் ஒரு பாடலை ஒருமுறை கேட்ட அளவானே ஒப்பித்ததை வரலாறு கூறுகின்றது. ஏழாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன்' எனத் தம் வரலாற்றை அந்தகக்கவி வீரராகவர் குறிப்பிடுகின்றார். "வெண்பா ருக்காலில் கல்லானை வெள்ளோலை, கண்பார்க்கக் கையால் எழுதானைப் பண் பாவி பெற்றாளே பெற்றாளே பிறர் நகைக்கப் பெற்றாளே' என்று ஔவையார் தனிப்பாடல் எள்ளி நகையாடுகிறது. இக்காலத்தும் மதுரையில் திகழும் பண்ணிசை வல்லார் திருப்பதியார் ஒரு பாடலை இருமுறை கேட்ட அளவானே அருமையாக இசையுடன் பாடுதலை நேரிடையில் ஆய்ந்து கண்டுள்ளோம். திருக்குறள் எண்கவனர் கோயில்பட்டி இராமையனார் நினைவாற்றல் திறம் சொல்வார் சொல்லிறந்து செல்லும் தகைத்தாய்த் திகழ்கின்றது. இவையெல்லாம், நெஞ்சில் குத்தி உருப்போட்டு வரப்படுத்திக் கொள்வனவாய் அமைவன வல்ல! வள்ளலார் திறம், ஒருமுறை படித்தாலே கேட்டாலே - எழுதினாலே - பச்சை மரத்தில் பதியும் ஆணி யெனப் பதிந்ததாகலின் அக் கல்வி ஓதாக்கல்வி எனப் பெற்றதாம். இன்னும் தெளிவு வேண்டுமோ?

“தேன்படிக்கும் அமுதாம்நின் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன்; நாவொன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்

தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே”

66

“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே'

-