புறத்திரட்டு
உள்ளத் துணர்வை உரையால் தெளிக
596. பஞ்சிநன் றூட்டப் பட்ட
மாதுளம் பருவ வித்து
மஞ்சினின் றகன்ற சாகை
மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய்
சூழ்ச்சியு மன்ன தேயால் வெஞ்சொலொன் நுரைக்க மாட்டா
விடுசுடர் விளங்கு பூணோய்.
217
-சூளாமணி 237, 248, 274, 236, 242,647, 240, 275
விழைப வெல்லாம் வெளிப்படா தமைக்க
597. காய்ந்தெறி கடுங்கற் றன்னைக்
கவுட்கொண்ட களிறுபோல்
ஆய்ந்தறி வுடைய ராகி
யருளொடு வெகுளி மாற்றி
வேந்தர்தாம் விழைப வெல்லாம்
நாந்தக வுழவ ரேறே
வெளிப்படா மறைத்தல் கண்டாய்
நன்பொரு ளாவ தென்றான்.
56. வலி யறிதல்
-சீவகசிந்தாமணி 2910
("தனக்குள்ள வலியும் பிறர்க்குள்ள வலியும் அறிதல்'
மணக். பரிப்.
இ.பெ.அ: திருக். 48.)
வலியரை எள்ளல் வளருந் துயராம்
598. இகலின் வலியாரை யெள்ளி யெளியார் இகலி னெதிர்நிற்ற லேதம் - அகலப்போய் என்செய்தே யாயினு முய்ந்தீக சாவாதான் முன்கை வளையுந் தொடும்.
—