புறத்திரட்டு
செறியெயிற் றாளி வேழப்
219
பேரினஞ் செகுத்த தன்றே
உறுபுலி யொன்று தானே
கலையின முடற்றிற் றன்றே.
-சீவகசிந்தாமணி 814
57. கால மறிதல்
(“வினை செய்தற்காம் காலம் அறிதல்' - மணக். பரிப்.
இ.பெ.அ: திருக். 49.
இ.சா.அ: ப.பா.தி. 42 (காலத்தின் அருமை))
க
காலம் அறிந்து கடமை புரிக
604. அன்பி னெகிழ வழிபட்டுக் கொள்ளாது நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே கன்றுவிட் டாக்கறக்கும் போழ்திற் கறவானாய் அம்புவிட் டாக்கறக்கு மாறு.
விரைந்து செய்தலும் விளைக்கும் கேடு
605. புரையக் கலந்தவர்க் கண்ணுங் கருமம் உரையின் வழுவா துவப்பவே கொள்க வரைய நாட விரையிற் கருமம்
சிதையும் இடராய் விடும்.
பழமொழி 166, 164
அடக்க மாக ஆள்வினை புரிக
606. ஆற்றுந் துணையும் அறிவினை யுள்ளடக்கி ஊற்ற முரையா ருணர்வுடையார் - ஊற்றம் உறுப்பினா லாராயு மொண்மை யுடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
1. கலையுமுன் னுடற்றிற்.
-நாலடியார் 196