220
607.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
பகைவரை எள்ளிப் படுதுயர் எய்தேல் வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை எள்ளி 'யுணர்த லியல்பன்று - தெள்ளியார் ஆறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார் நீறுமேற் ‘பூத்த நெருப்பு.
-புறப்பொருள் வெண்பாமாலை 166
நாளும் கோளும் நல்லவை கூட்டும்
3
608. நாள்கூட்ட மூழ்த்த மிவற்றொடு நன்றாய
கோள்கூட்டம் யோகங் குணனுணர்ந்து - தோள்கூட்ட
லுற்றானு மல்லானு மைந்து முணர்வானாற் பெற்றானாட் கொள்க பெரிது.
-சிறுபஞ்சமூலம் 44
இடம்பொழு தெண்ணி இயற்றுதல் ஏற்றம்
609. இடத்தொடு பொழுது நாடி
610.
யெவ்வினைக் கண்ணு மஞ்சார்
மடப்பட லின்றிச் சூழு
மதிவலார்க் கரிய துண்டோ
கடத்திடைக் காக்கை யொன்றே
யாயிரங் கோடி கூகை
இடத்திடை யிரங்கச் சென்றாங்
கின்னுயிர் செகுத்த தன்றே.
-சீவகசிந்தாமணி 1927
ஞாலமாள் வோர்க்குக் காலமே கண்கள்
சீல மல்லன நீக்கிச்செம் பொற்றுலைத்
தால மன்ன தனிநிலை தாங்கிய
ஞால மன்னர்க்கு நல்லவர் நோக்கிய கால மல்லது கண்ணுமுண் டாகுமோ.
-இராமா. அயோ. 118
1. யுரைத்த.
2. போர்த்த
3. மூர்த்த.