புறத்திரட்டு
231
மறத்தலின்மை.பொச்சாப்பு
செய்ய வேண்டும் இடங்களினும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும்” - மணக்.
இ.பெ.அ: திருக். 54.)
இகழத் தகாத இனிய பொருள்கள்
654. சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந் தாளினாற் றந்த விழுநிதியும் நாடொறும் நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் 'காப்பிகழ்த லாகாப் பொருள்.
மனத்துற வாளர் மயக்கில் அகப்படார் 655. அலைபுனலுள் நிற்பினுந் தாமரை யீன்ற இலையின்கண் நீர்நிலா தாகும் - நிலையில் புலங்களில் நிற்பினும் பொச்சாவா ராயின் மலங்கடி வாளா தவர்க்கு.
-திரிகடுகம் 47
-அறநெறிச்சாரம் 148
பொன்போற் போற்றிக் காக்கத் தக்கவை
656. தன்னுடம்பு தாரம் அடைக்கலந் தன்னுயிர்க்கென் றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
3
பொன்னினைப் போற்போற்றிக் காத்துய்க்க 'காவாக்கால் *அன்றே விழுமந் தரும்.
-ஆசாரக்கோவை 95
ஆய்ந்து தெளிக அரும்பொரு ளாயினும
657. வண்ணப்பூ மாலை சாந்தம்
வாலணி கலன்க ளாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை
கண்டலாற் கொள்ள வேண்டா
அண்ணலம் புள்ளோ டல்லா
லாயிரம் பேடைச் சேவல்
1. காப்பிகழ.
2. வுய்யாக்கால்.
3. மன்னிய வேதந்தரும்.