புறத்திரட்டு
வறியர் விருந்தாய் வளத்தோர் செல்லேல் 1129. நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார் செல்விருந் தாகிச் செலல்வேண்டா - ஒல்வ திறந்தவர் செய்யும் வருத்தங் குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்.
345
-பழமொழி 88, 337
நண்பர்க் குற்றது நமக்கும் உற்றதே
1130. சாக்காடு கேடு பகைதுன்ப 'மீனமே
நோக்காடு 'நாட்டறை போக்கின்ன - நாக்காட்டார் நட்டோர்க் கியைபிற் றமக்கியைந்த 3கூறுடம் பட்டார்வாய்ப் பட்டது பண்பு.
நாணப் பரிந்து நல்லார் கேட்பர்
1131. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி கல்லா வொருவ னுரைப்பவுங் கண்ணோடி நல்லார் வருந்தியுங் 'கேட்பவே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து.
பண்புடை யார்க்குப் படாத நாட்கள்
1132. கல்லாது போகிய நாளும் பெரியவர்கட் செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலு முரைப்பிற்
படாஅவாம் பண்புடையார் கண்.
-ஏலாதி 79
-நாலடியார் 155
பன்னாட் செலினும் பண்போ டுதவுவார்
1133. பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலா தம்முழை என்னானும் வேண்டுப வென்றிகழ்வார் - என்னானும் 2. நாட்டறைபோக் கின்னன. 4. கேட்பரே.
1. மின்பமே.
3. நூலுடம்.