புறத்திரட்டு
றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்த நின்னொடு பாங்கலா மன்னர் படை.
மண்ணே அன்றி விண்ணும் வேண்டுமோ?
1308. துன்னருந் துப்பிற் 'றொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னமரு மொள்வாளென் கைத்தந்தான் – மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து.
விண்ணின் விருந்தா விழைவார் வருக
1309. இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி முன்னர் வருக முரணகலும் - மன்னர் பருந்தார் படையமருட் பல்லார் புகழ விருந்தா யடைகுறுவார் விண்.
தான்படை தீண்டாத் தறுகண் உரவோன்
1310. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந்
தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல் கண்ணியபி னன்றிக்கறுத்தார் மறந்தொலைதல்
2எண்ணியபி னோக்குமோ வெஃகு.
391
-புறப்பொருள் வெண்பாமாலை 134, 65, 47, 55
கொல்லும் உரிமை கொடுப்பான் வேந்தன்
1311. நல்வா னவர்காண நம்மை யமரகத்து
வெல்வான் விரும்பிய வேல்வேந்தைக் - கொல்வான்
உனக்கே யுரிமை யுளதெனினு மிப்போ
ம
ரெனக்கே தருவா னிறை.
ஏவு முன்னர் ஏற்பார் சிலரே
1312. தாரேற்ற நீள்மார்பிற் றன்னிறைவ னோக்கியக்காற் போரேற்று மென்பார் பொதுவாக்கல் வேண்டுமோ
-பாரதம்
1. றொழுகழலார்.
2. எண்ணியபின் போக்குமோ.