1. நெறிதர.
புறத்திரட்டு
கற்சிறை போலக் கலங்காத் திட்பம்
1317. வேற்றானை வெள்ள 'நெரிதர யாற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லா லெளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுந ரென்னுஞ் செருக்கு.
உற்றுழி உதவார் இளையர் ஆவர்
1318. பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற் குற்றுழிச் சாவா தவர்.
தலைவன் ஆதலால் தரித்திலேன் நின்நா 1319. பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா
இரவே யெறியென்றா யென்னை - விரைவிரைந்து வேந்தனீ யாயினா யன்றிப் புகுவதோ
போந்தென்னைச் சொல்லிய நா.
விலங்கை வெல்வது வீரம் அன்றுகாண்!
1320. வான்வணங்கி யன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும் விலங்கா லொருகைத்தால் வெல்கைநன் றென்னும் நலங்காணே னாணுத் தரும்.
1321.
காலாள் என்று காலாள் எறியான்
காலாளாய்க் காலா ளெறியான் களிற்றெருத்தின் மேலா ளெறியான் மிகநாணக் காளை கருத்தினதே யென்று களிறெறியா னம்ம தருக்கினனே சான்றோர் மகன்.
393
-தகடூர் யாத்திரை