400
இளங்குமரனார் தமிழ் வளம் 17
121. அமர்
ருபால் வீரரும் போரிடல், அமர். போர் என்பதும் இது. இவர் தும்பைப் பூச் சூடுவராகலின் இது தும்பைத் திணையாம்.
66
மேற்: தொல். பொருள். 70. பு.வெ.மா. 127. ‘அதிரப் பொருவது தும்பை” வீரசோ. பொருள். 121. மேற். "பொருதல் தும்பை புணர்வ தென்ப" - பன்னிரு படலம்.)
1. வளம்படு.
-
தும்பை மிலைந்தான் துப்புடை வேந்து
1345. கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மிலைந்தான் துகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து.
வாளை வீசி வயவர் ஆடுதல்
1346. வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார் ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக் காய்ந்தடு துப்பிற் 2கழல்மறவ ராடினார் வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.
-புறப்பொருள்வெண்பாமாலை 127, 147
விண்ணை வேண்டி விரைந்தார் வெங்களம்
1347. கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து
மலிபுகழ் வேண்டு மனத்தர் - ஒலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணியமாம் போர்க்களத்துப் போந்து.
இடிமுகில் இடியால் இடிபட லொக்கும்
1348. இடியா னிடிமுகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மன்ன ரிமையாத 'கண்கண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு.
2. கழன்மடவா ராட்டினார்
-பாரதம்