புறத்திரட்டு
பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே.
மகிழவு மில்லன்; இகழவு மில்லன்
1464. கிண்கிணி களைந்தகா லொண்கழல் தொட்டுக் குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை அழுங்கப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக்
கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை
மகிழ்ந்தன்று மிகழ்ந்தன்று மதனினு மிலனே.
435
-புறநானூறு 25, 76, 77
129. புகழ்
கொண்ட வேந்தனைத் தேவர்களுடன்
(வெற்றிநடை கொண்ட
ஒப்பிட்டுப் புகழ்ந்து கூறுவதும் அவன் சிறப்பியல்புகளை விரித்துக் கூறுவதும் புகழாகும்.
மேற்: தொல். பொருள். 60.பு.வெ.மா. 227.)
1. தெரியல்.
மயிலூர் மைந்தனும் மாறனும் ஒப்பர்
1465. மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளுங்
கடம்பம்பூக் கொண்டேத்தி யற்றால் - தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன்றமிழால் யாம்பாடும் பாட்டு.
2.கவின.