90.
புறத்திரட்டு
றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறித்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி
வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்து காலைக் கோயிற் கம்பலை யூர்முத லுணர்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்த விசும்பி
னியன்றதலை யுலகமு மறிந்ததா லதுவே.
-
475
பாரதம். தொல். பொருள். 72. நச். மேற்.
22. (122) தானைமறம்
நிற்கு முடலம் பொற்பா ‘மரவடி’
சென்ற வுயிர்பேலத் தோன்றா துடல்சிதைந்தோ னின்ற வடிபெயரா நின்றவை - மன்ற
லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த
மரவடியே போன்றன வந்து.
-தொல்.பொருள். 72. நச். மேற்.
கடலில் கலங்கள் களத்தில் தேர்கள்
91. கார்க்குலமும் பாய்திரையுங் காட்டும் கடற்படையும்
போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமால் - ஏற்ற
கலமுடைத்து முந்நீர் கதிராழித் திண்டேர்
பலவுடைத்து வேந்தன் படை.
-தண்டி. 48. மேற்.