உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

169

இனிய இல்லற வாழ்வைத் தலைவன் பாழாக்கிக் கொள்வதை அவள் விரும்பவில்லை. ஆதலால் அறிவறிந்த தலைவனும் அறியுமாறு நயமாகக் கூறுகிறாள்.

66

தலைவ,செல்வாக்குடன் வாழ்வதும், விரைந்து செல்லும் ஊர்திகளில் போவதும் 'செல்வம்' என்று சொல்லப் படுபவை அல்ல. அவை, அவ்வலர் செயல் திறனால் அமைபவை; உயர்ந்த பெருமக்கள் செல்வம் என்று சொல்வது தன்னைச் சேர்ந்தவர் களைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கனிவு ஒன்றுமேயாம்” என்றாள்.

வாழ்வாவது யாது என்பதையும் விளக்குகிறாள் தோழி, ஒரே ஓர் உடையே உடையவராய், அவ்வுடையை இரண்டாகக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்பவராக இருந்தால் கூட, பிரிவும் பிணக்கும் இல்லாமல் ஒன்று பட்டு வாழ்பவர் வாழ்க்கையே வாழ்க்கையாம்,

66

ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

وو

சிறு வயதிலே எத்தகைய பேரறிவு தோழிக்கு! தோழி சிறுப் பெருமகள் என்னும் பாராட்டுக்கு உரியவள்.

தலைவன் ஒருவன் பிரிகிறான்: தலைவி ஆற்றாமல் வருந்துகிறாள். அவளை ஆற்றித் தேற்றும் பொறுப்பு தோழிக்கு உண்டாகிறது. அந்நிலையில், தலைவன் நல்லியல்புகளை யெல்லாம் சொல்லித் தலைவியை மகிழ்விக்கிறாள்: கவலையை மாற்றுகிறாள்.

"தோழி! தலைவர் நெடுந்தொலை சென்றிருப்பது உண்மைதான். ஆயினும் அவர் மிகப் பேரன்பினர் என்பதை மறக்கமுடியுமோ? கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் குறித்துச் சென்ற பொழுது தவறாமல் வந்தே தீர்வார்.

"தோழி! நம் தலைவர் நம்மை விட்டுப் பிரியக் கூடியவரோ? பிரிந்தாலும் கவலை இன்றித் தங்கக் கூடியவரோ? நாம் படும் துயரினும் அவர் படும் துயர் பெரிதாகி ஓடி வருவார். இதோ பார்! நாம் தலைவரை நினைக்கும் போதெல்லாம் தவறாமல் பல்லி நல்ல சொல் சொல்வது கேட்கவில்லையா? நீ கவலை ஒழிக” என்கிறாள். இப்பொழுது தோழி ஒரு நல்ல மருத்துவி!