உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம்

18

காட்டையும் காட்டாற்றையும் கடந்து அஞ்சாமல் நள்ளிரவில் தலைவன் வருகிறான். அவன் வரும் வழியை நினைத்து அஞ்சி அஞ்சித் துன்புறுகிறாள் தலைவி! இவ்விருவர்க்கும் இடையே தவிக்கிறாள் தோழி! அவள் தவிப்பைக் கேட்டு நாமும் தவிக்கிறோம்!

ப்

“தலைவனே, நீ வழியச்சம் பாராது வருகிறாய்! வளோ தன் பெண்மையால் உனக்கு என்ன நேருமோ என அஞ்சுகிறாள்! தான் பெற்ற இரட்டைப் பிள்ளைகளும் ஒரே வேளையில் நஞ்சுண்டதைக் கண்டு தவிக்கும் தாய்போல உங்களைக் கண்டு நான் தவிக்கிறேன்.

தோழியின் தாய்மை ததும்பும் இடம் இது.

தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரு பிணக்கு. தலைவன் வீட்டுக்கு வருவது இல்லை. தலைவி அவன் மேல் கொண்ட சினம் ஆறுவது இல்லை. இந்நிலையில் மிக நொந்து போகிறாள் தோழி.

66

‘அன்னி என்பவனுக்கும் பெரியன் என்பவனுக்கும் ஒரு போர்: அப்போரில் ஒரு புன்னை மரம் வெட்டப்பட்டது. அது வெட்டுப்பட்ட அளவில் போர் ஓய்ந்தது. அதுபோல் உங்கள் இருவருக்கும் உள்ள பகை யான் இறந்து போனால் என்னோடு ஒழிந்து போகும் போலும்” என்றாள்! தன்னுயிர் தந்தும் அவர்கள் நலமாக வாழ வேண்டும் என்னும் பெருந்தகைத் தோழி உள்ளம் தெய்வ உள்ளமேயாம்.

பிறருக்கெனவே வாழும் தோழிக்கு அத்தனை தொல்லை களுக்கு இடையேயும் ஒரு மகிழ்ச்சி: அது தலைவியின் புகழ்ச்சியாகும்.

"தோழி, தலைவன் குடி நன்கு உடையன்: கூடுநர்ப் பிரியலன்: கெடுநாமொழியலன்: அன்பினன் என்று சொல்லி நாங்கள் மணந்து கொள்ளுதற்கு வேண்டுவன வெல்லாம் செய்தாய், உண்மையாகவே அவன் நல்லவன்: இனியன்; இன்பமூட்டும் இசையினும் இனியன்; இசைக்கு அமைந்த தாளத்தினும் இனியன்; திருமண நாளினும் இனியன்; என் காதல் தோழியே நீ மிகவும் நல்லவள்; வல்லவள்; என்று தலைவி பாராட்டுகின்றாள். இது தலைவி தோழிக்குச் செய்யும் மலர் வழிபாடாகும்.