உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஓதாக் கல்வி

வள்ளலார் வரலாற்றையும் வாக்கையும் படித்தவர்கள் ‘ஓதாக் கல்வி' என்னும் செய்தியை அறிவர். ஓதாக் கல்வி என்பது என்ன?

.

ஓதாமலே - பயிலாமலே -ஒருவர் போறிவைப் பெற்று விட முடியுமா?முடியும் எனின், கற்றுணர்ந்த - கற்பித்த - பெரு மக்களுக்குப் பெருமை சேர்க்குமா? படிக்காமலே ஒருவர் பேரறிவு பெற்றார் என்பது அவர் தமக்குமே பெருமை சேர்க்குமா ‘படிப்பின்மையைக் கருதிக் கூறுவதேயன்றி அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள் என ஒருதலையாகக் கூறுவதன்றே. தனியே எவ்வளவு படித்தனர், பட்டறிவுற்றனர்!

வள்ளலார் பாக்களிலும் உரைநடை நூல்களிலும் பொதுவில் நிற்கும் முந்தையோர் நூற்குறிப்புகள் எத்துணை எத்துணை! வரலாற்றுக் குறிப்புகள் எத்துணை எத்துணை! இலக்கண இலக்கிய மேற்கோள் செய்திகள் தாம் எத்துணை எத்துணை!

திருக்குறளை வள்ளலார்போல முழுது முழுதாகப் பொன்னேபோல் போற்றிக் கொண்டவர் தமிழுலகில் அரியர்! முதல் திருமுறையிலுள்ள ‘நெஞ்சறிவுறுத்தல்' ஒன்று சாலுமே!

நால்வர் நான்மணி மாலையின் நனி சிறப்பென்ன? நால்வர் வாக்குகளிலே தேக்கிய பிழிவின் வழிவாக்கன்றோ பெருக் கெடுத்தது அது? சிவப்பிரகாச அடிகள், நால்வர் அருண்மொழி களைப் பயிலாமல் நால்வர் நான்மணி மாலை இயற்றியிருப்பரோ? வள்ளலார் அருளிய ‘ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை' ஆகியவற்றைக் கற்போர், வள்ளல் பெருமகனார் உள்ளம், அந் நால்வர் பாடல்களில் தேக்கெறியத் தெவிட்டியமையே பாவெள்ளமெனப் பெருக்கெடுத்த தென்பதை மறுக்கவும் துணிவரோ?