தமிழர் வாழ்வியல் இலக்கணம்
ஒரே ஒரு குறிப்புச் சான்று
151
'அறம் முதலாகிய மும்முதற்பொருள்' என்னும் தொல்காப்பியமே, ‘முப்பால்' முன்னோடி.
ஒரு தெளிவு
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் வைப்பு முறை, தொல்காப்பியர் உரைத்தது (960). திருக்குறள் காமத்துப்பால் இவ்வைந்து உரிப்பொருள்களையே மாறா வரிசையில் வைத்து, ஒன்றற்கு ஐந்து அதிகாரங்களாக, ஐந்தற்கும் இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டு அமைகின்றது. ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காண்க.
உறக்கம் கொள்வதற்குப் பாடும் பாட்டு, கண்படைநிலை. உறக்கம் நீங்குவதற்குப் பாடும் பாட்டு, துயிலெடை நிலை. பிறந்தநாள் கொண்டாடுதல், பெருமங்கலம்.
முடிபுனைவிழா, மண்ணுமங்கலம்.
பரிசில் பெற்று விடை பெறுதல், பரிசில் விடை.
வாழ்த்துக் கூறுதல், ஓம்படை
பாடாண் திணையின் துறைகளுள் சில இவை.
மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இவ் வழக்கங்கள் புதுப் பொலிவுடன் இன்றும் நிகழ்தலை எண்ணிப்பார்க்கலாமே.
மேலும் வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பனவும் பாடாண் துறைகளே. அவற்றைச் செய்யுளியலில் காணலாம். யாம் பெற்ற பேற்றை நீவிரும் பெறுக என வழிகாட்டும் ‘ஆற்றுப் என்பதும் இப் பாடாண் துறைகளுள் ஒன்றேயாம். அது,
பை
66
“ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்
6T@I LI | (1037).
செல்லும் வழியில் தம் எதிரேவரும் பாணர் கூத்தர் முதலோர்க்கு அப் பாணர் கூத்தர் முதலோர், யாம் இவரைக் கண்டு இவ்வளம் பெற்றேம்; நீவிரும் சென்று பெறலாம்; செல்லும் வழி ஈது; சென்று பயன் கொள்க என வழிப்படுத்துவது ஆற்றுப்படையாகும்.
பட்ட
பத்துப்பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை என்பதால் அது போற்றப் வகை புலப்படும்.