தமிழர் வாழ்வியல் இலக்கணம்
205
உ
கலை - புல்வாய், உழை, முசு.
மோத்தை - ஆடு.
தகர் - ஆடு.
உதன் - ஆடு.
அப்பர் - ஆடு.
போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன,
மயில், எழால்.
-
கண்டி எருமை.
கடுவன் - குரங்கு.
பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும்
பேடை - கோழி
பெடை ஒட்டகம், குதிரை, கழுதை, மரை.
பெட்டை
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை.
பெண் - மக்கள்.
பிணா
-
மக்கள்.
மூடு-ஆடு.
நாகு
எருமை, மரை, பெற்றம், நந்து.
கட மை - ஆடு.
அளகு - கோழி, கூகை, மயில்.
மந்தி - குரங்கு, முசு, ஊகம்.
பாட்டி - பன்றி, நாய், நரி.
பிணை -புல்வாய், நவ்வி, உழை, கவரி.
பிணவு - பன்றி, புல்வாய், நாய்.
பிணவல் - பன்றி, புல்வாய், நாய்.
பிடி - யானை.
ஆ - பெற்றம், எருமை, மரை.
இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின்,
“பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே”
என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569)