தனிப்பாடல் கனிச்சுவை
155
53. புலவன்
கம்பர் மகன் அம்பிகாபதி; அம்பிகாபதியின் மகன் பொய்யாமொழி; பொய்யாமொழிப்புலவர் தஞ்சைவாணன் கோவை பாடியவர். அவரை மதித்த அரசர் 'புலவர் என்றால் பொய்யா மொழியாரே புலவர்' என்று பாராட்டினார். ஆனால் பண்பா டமைந்த புலவராகிய பொய்யாமொழியார் இப்புகழ்ச் சொல் கேட்டு தலை நாணினார்.
அறநூலாகிய திருக்குறளை இயற்றியவனும் புலவன்; அத்திருக்குறளுக்கு உரைகண்ட புலவனும் புலவன்; குறுமுனிவன் என்று சொல்லப்படுவானும் புலவன். இவர்களோடு என்னையும் புலவர் என்றால் அறிவுடைய பெருமக்கள் ஏற்றுக் கொள்வரோ என்று பாடினார்.
று
66
அறமுரைத் தானும் புலவன்முப் பாலின் திறமுரைத் தானும் புலவன் - குறுமுனி தானும் புலவன்; தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனின்”
என்பது அப்பாடல்
அறம், முப்பால் - திருக்குறள். குறுமுனி - அகத்தியன்; தரணி – உலகம். புலவர்கள்;
-
எனின் - என்று சொன்னால்.