இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
210
>இளங்குமரனார் தமிழ் வளம் – 20
வள்ளுவர் வழங்கும்,
“அருள்என்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு
என்னும் ‘செவிலி' பொதுமக்கள் வழங்குமொழியாகிப் பொருள் சிறந்து விளங்குதல் அறியத்தக்கதாம்.
பெற்ற தாயை அடுத்துச் சொல்லப்படுபவள் செவிலித்தாய். ஆட்டு தாய், ஊட்டு தாய், கைத் தாய் எனப்படுவார் பிறர். அந்நாளில் செல்வக் குடும்பங்களில் 'ஐந்தாயர்’ எண்ணப்
பட்டனர்.