உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பிட்டங் கொற்றனுக்கு இப்பெருமை எப்படி ஆயது? "வாழ்வோர் வாழ வாழ்ந்தவன்" அவன் ஆதலால் புகழின் கொள்கலம் ஆனான்.

உலகில் எவர் இடரின்றி வாழ வேண்டும்?

வாழத் தக்க நல்லோர் அல்லல் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும். அவர் நல்வாழ்வே உலகின் நல்வாழ்வு. ஆதலால் அவர் நெடிது வாழ்வதற்கு அரண்போல் அமைந்து காக்க வல்லார் கட்டாயம் வேண்டும்.

பிறர்க்கென வாழும் பெருந்தகையர் தம்மைக் காத்துக் கொள்ளத் தாம் எண்ணார். அத்தகையர்க்கு உதவிக்காக்கும் கடப்பாட்டாளர் வேண்டும். அவ்வாறு காப்பவரே வாழ்வோர் வாழ வாழ்பவர் ஆவர். அவ்வாறு வாழ்ந்தவன் பிட்டன் என்றால் அவன் மட்டிலாப் புகழுக்கு இருப்பானவன் தானே!

ம்

பிட்ட னைப் பாடிய புலவர் பெருமக்களுள் ஒருவர் கண்ணனார். அழகுமிக்க கருநீலக் கண்ணர் அவர். காவிரிப் பூம்பட்டினத்தார். முடியுடைய மூவேந்தர் அன்பையும் ய ஒருபடியாகப் பெற்ற பெருமை யர். அவர் முழுப் பெயர் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பது.

பிட்டன் பெரும் புகழ் கேட்டு அவனை அண்மினார் கண்ணனார். தாம் கேட்டறிந்த புகழ் அனைத்தும் உண்மையே என்பதை உணர்ந்தார். தமக்கு அள்ளி வழங்கிய வள்ளன்மையில் ஒன்றினார். அவ் வொன்றுதல் தந்நலத்தால் ஆயது அன்று. அவர்க்கு எப்படி வழங்கினானோ அப்படியே பிறர்க்கும் வழங்கி னான் பிட்டன். அதனால் இப் 'பெருந்தகை பிறர்க்கும் அன்னன்’ என்பதை உணர்ந்த பெருமிதத்தில் ஓங்கினார்.

66

'இப்பொழுது தருகிறான். இன்னும் சில நாள் சென்று வரினும் தருவான்; அதற்குப் பின்னரும் முன்னே தந்தேன் எண்ணாமல் மேலும் தருவான்.

சென்ற பருவத்தில் கனிதந்தேனே என்று இல்லாமல் பருவந்தோறும் தரும் கனிமரம் போலத் தருவான்.

கனிமரத்திற்குக் கூடப் பருவம் என ஒன்று உண்டு. ஆனால்

இவன் கொடைக்குப் பருவம் என்பது தானும் எப்பொழுது வேண்டினும் வேண்டுமாறு தருவான்.

ல்லை.