உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

45

இவன் நெடிது வாழ வேண்டும், வாழ்வோர் வாழ இவன் நெடிது வாழ வேண்டும். இவன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாய் முடியவேண்டும்” எனப் எனப் பலவாறு எண்ணி மகிழ்ந்தார் கண்ணனார்.

“என் தந்தை போல்வானாகிய இவனை நான் வாழ்த்துதல் வேண்டும். எப்படி வாழ்த்துவேன் எனச் சிந்தித்தார். பிட்டனைப் பற்றிப் பாடியவர் பாடல்கள் அவர் நினைவில் நின்றன.

“கொல்லன் தன் சம்மட்டியை ஓங்கி ஓங்கி அறைகிறானே உலைக்கல் (பட்டடை)! அவ்வுலைக் கல் அசைகின்றதா? சம்மட்டி எப்படித் தாக்கினால் என்ன? இம்மியும் நடுங்காத உலைக்கல் அன்னவன் பிட்டன் ன்” என்ற மருத்துவர் தாமோதரனார் பாடல் நினைவில் வந்தது (புறம்.170).

"கோசர் என்பார் படைப்பயிற்சியில் சிறந்தவர், அப்பயிற்சிக்காக அகன்ற பெரிய முண்முருங்கை மரத்தைக் கம்பமாக நட்டு அதனை இலக்காக வைத்து வேலும் அம்பும் ஏவிப் பயிற்சி செய்வார். அக்கருவிகளுக்கு இலக்காகிய மரம் போல், பகைவர் படைக் கலம் தைக்கவும் நிமிர்ந்து நிற்கும் வல்லாளன் பிட்டன்” என வியந்து போற்றினார்.

‘பிட்டன் விழுப்புண் படட்டும்; நேர்தாக்குதலில் நெஞ்சகத்து இடமில்லையாய்ப் படைகள் துளைப் பினும் துளைக்கட்டும். ஆனால் அவன் உள்ளடியில் முள்ளும் தைக்காமல் இருக்கட்டும்' என்று பெருமூச்சு விட்டார்.

பிறருக்காக வாழ்பவனுக்கு அவன் அறியாமல் மறைமுகமாக, ஒரு முள்ளும் கூட - அதுவும் புறத்தடி யில் இல்லாமல் உள்ளடியில் கூட தைத்தல் கூடாது என்னும் கொள்கைச் சிறப்பு என்னே! என்னே!

-

இக்கொள்கையில் ஊன்றியிருந்தால் முத்தநாத னியமும் கோட்சேயியமும் இன்ன பிற வல்லியங் களும் நாட்டில் தோன்றியிருக்குமா? மாந்தர் நோக மாந்தர் பார்க்கும் வழக்கமும் வாழ்க்கையும் தலைவிரித் தாடுமா?

“எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்க"

என்று கனிவுடன் வேண்டும் காரிக்கண்ணரின், “அந்த உணர்வு எங்கே? எங்கே?”