உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

-

இளங்குமரனார் தமிழ் வளம் 22

மறைமலையடிகளும் கா. சு. பிள்ளையும் என் வலக்கையும் இடத்தைப் போன்றவர்கள்.

தந்தை பெரியார்.

"இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வரலாற்றில் மானுடம் இவர்தாம் அல்லர்; நம் பெரும் தெய்வம்" எனத் திகழ்ந்திருந்து அரும்பெருந் தொண்டுகள் ஆற்றியுள்ள மறைமலையடிகளுக்கு ஒரு பெரும் தனிச் சிறப்பிடம் உண்டு. தமிழுக்கும் சமயத்திற்கும் சமுதாயத்திற்குமாகப் பல்வேறு துறைகளில் அளப்பரும் தொண்டுகள் ஆற்றியவர் அப் பெருந்தகையாளர்.

- ந. ரா. முருகவேள்.

என்பும் உருகும் இசைபாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம்புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர்.

-

அ. கனகராயர்

மறைமலை அறிவூற்று ஊறிய மாமலை. பல்வகைக் கருத்துவளம் கொழித்த மாமலை; அயல் வழக்கின் களைகடுத்த மாமலை; மறைமலையடிகள் ஒரு தமிழ்நிறுவனம்; சமய இயக்கம்; அவர்தம் எழுத்தும் பேச்சும் ஒரு புதிய தலைமுறையையே தோற்றுவித்திருக்கிறது.

தவத்திரு குன்றக்குடியடிகளார்.

கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அறியமுடியாது என்பார்கள். அதுபோலவே தவக்கோலத்தில் இருந்த தமிழ்க்கடலாம் மறைமலையடிகளின் மாண்பையும் அவர் இயற்றியுள்ள நூல்களின் பெருமையையும் சொல்லிவிட முடியாது.

-தொழிற்செல்வர் நா. மகாலிங்கம்.

தமிழ் என்றாலே தாழ்வு லே தாழ்வு என்றே கொண்டு தமது மொழியின் தகுதி மறந்து தாழ்வுற்ற தமிழகத்தில் தமிழ் ஒன்றே உயர்வு அன்றியும் தனித்தமிழே நனியுயர்வு என்று உளங்கொண்டு தமது எழுத்திலும் பேச்சிலும் நாளும் தனித்தமிழின் கனிச்சுவை காட்டி, நாடெங்கும் நல்ல தமிழ் வலம் வரச் செய்த தனிப்பெருமை பூண்டவர் அடிகளார்.

-பேராசிரியர் க. அன்பழகனார்.