உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

139

பாடற் சுவையையும் சுருக்க வடிவையும் அருமையாக விளக்கும் அடிகள் அவ்வகையாலேயே இப்பாடலை ஆய்ந்து வரைகின்றார்.

பொருட் பாகுபாடு:

பொருட் பாகுபாட்டினைக் காவிரியாற்றின் சிறப்பு, சோழ நாட்டு மருத நில வளம், பாக்கம், படப்பை முதலியன. சோறிடும் அட்டிற் சாலைகள், பள்ளிகள், காளி கோட்டம், குப்பம், புறச்சேரி, காவிரித் துறை, கடையாமம், சங்கங்கொள்வோர், பண்டக சாலை, அங்காடித் தெரு, கொடிச் சிறப்பு, பொருள் வளம், வேளாளர் குடியிருப்பு, காவிரிப்பூம் பட்டினச் சிறப்பு, கருக் கொண்ட பொருள், கரிகாலன், இளந்தை வெற்றி, மருத நிலம் பாழாதல், அம்பலங்கள் பாழ்படல், மன்றம் பாழ்படல், கரிகாலன் வெற்றித் திரு. கருப்பொருள் முடிபு எனப் பாகுபாடு செய்து வினைமுடிபு காட்டுகிறார். இம்முறையே முறையாய்ப் பொருட்பாகுபாட்டுக்குத் திரண்ட பொருள் தருவதுடன் பின்னே விளக்க உரைக் குறிப்புகளும் வரைகின்றார்.

அகப்பொரும் பாலையும், புறப்பொருள் வாகையும் ஒத்தியலும் வகையை "அகத்தே நிகழும் அன்பை வெற்றி காணும் "பாலை"யும் புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றி காணும் வாகையும் தம்முள் ஒப்புமையுடையவாதல் தெற்றெனப் புலப்படும் என்கிறார் (48)

பாட்டின் வரலாறு :

"பாட்டின் வரலாற்றை

உய்த்துணர்ந்து காட்டல்

இழுக்காது எனக் கூறி, அப்பாட்டின் பொருளைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகவாழ்வொடு சார்த்தி அருமையாய் உரைக்கிறார்.

உருத்திரங்கண்ணனார் தம் ஆருயிர்க் காதலியொடு மருவியிருந்து இல்லறம் நடத்துங்கால் அவர்தம் பொருள் வளஞ்சுருங்க, வறுமை வந்து நலிய, அதனைக் களைய விரும்பிக் கரிகாற் சோழனிடத்துச் செல்லக் கருத, பிரிவுக்குப் பொருந்தாராய் மனைவியார் வருந்த, அவர் ஆற்றாமை தணித்துப் பின்னொரு கால்அவ்வேந்தனைக் கண்டு பாடி ப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாகப் பெற்றார் என்று வரைகின்றார்.