உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே' என்பதால் உயிருண்மையையும்,

“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

187

என்பதால் உலகு உண்மையையும் ஆசிரியர் தொல்காப்பியனார் உரைத்தார் என்பதைக் குறிப்பிட்டுச் சிவனிய நெறி தமிழ் நெறியே என்பதை மெய்ப்பிக்கிறார். (பழந்தமிழ்க் கொள்கையே

சைவ சமயம்)

இனிக்“கடவுள் நிலை" என்பது எது என்பதையும் அடிகளார்

சுட்டுகிறார்.

1.

2.

3.

4.

ம்

5.

6(அ)

(ஆ)

உலகோர் அனைவரும் "கடவுள் ஒருவர் உண்டு" என்னும் கொள்கையர்

உடல் உலகு உலகப் பொருள்கள் ஆகியவற்றை உண்டாக்கிய ஒன்று உண்டு என்னும் கொள்கையர். உயர்ந்த படைப்பாளியைக் கண்டு மகிழக் கருதுவார் போலக் கடவுளைக் காணும் வேட்கையினராக உள்ளனர். கடவுளை வணங்குவோருள் அச்சத்தால் வணங்குவோர், அன்பால் வணங்குவோர் என இருதிறத்தார்.

அழியாப் பேரின் பத்தில் இருத்தவே, இறையை வணங்கக் கற்பித்தனர்.

சிவபெருமானை அன்றிச் சிற்றுயிர் வடிவங்களைச் செய்து வழிபாடு செய்தல் பெரிதும் குற்றமாகும்.

அரசனை வணங்காமல் அவனால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை வணங்குவது போன்றது சிறு தெய்வ வழிபாடாகும்.