உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

7

?

நாற்பத்து ஐந்தாம் அகவையிலே எழுதிய 'அறிவுரைக் கொத்து' என்னும் நூலிலே. 'தமிழிற் பிறமொழிக் கலப்பு, தனித்தமிழ் மாட்சி என்னும் கட்டுரைகளை வரைந்தார் அடிகளார். 'தனித்தமிழும் கலப்புத் தமிழும்' என்றொரு கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வியில் எழுதினார். இளங்குயில் நீலாவோ, புலத்துறை முற்றியபோதில் 'தனித்தமிழ்க் கட்டுரைகள்' என்னும் நூலும், வட சொல் தமிழ் அகர வரிசை என்னும் நூலும் ஆக்கினார். தனித் தமிழ் பற்றிய அடிகளார் குறிப்புகளுள் சில :

'இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிற சொற்களைப் புகுத்துதல் எதுபோல் இருக்கிறது என்றால், எல்லா உறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்புகளை வெட்டி எரித்துவிட்டு வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ் உறுப்புகள் போற்செய்து அவற்றை அதன்கண் ஓட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாய் இருக்கின்றது.

"மயிர், குஞ்சி, கூந்தல் முதலிய தமிழ்ச் சொற்களை விடுத்து "ரோமம்", சரீரம், சிரசு, வதனம் என்பவற்றையும்,

கண், காது, செவி, மூக்கு என்பற்றுக்கு 'நயனம்' கர்ணம், நாசி என்பவற்றையும்,

மிடறு, கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் கண்டம் என்னும் சொல்லையும்,

தோள், கை முதலியன இருக்க புஜம் கரம் என்பவற்றையும், வயிறு, அகடு இருக்க உகரம் குக்ஷி என்பவற்றையும்,

கால், அடி என்னும் சொற்களுக்குப் பதம் பாதம் என்பவற்றையும் கொண்டுவந்து நுழைத்தல் அவ்வத் தமிழ்ச் சொற்களாகிய உறுப்புகளை வெட்டி எறிந்து விட்டு அவை போன்ற ஏனைமொழிச் சொற்களைக் கொணர்ந்து அத் தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலைப் போல்வது அன்றோ!

பொருள்களை, வஸ்துக்கள் என்று சொல்வது எதற்கு? ஒளியைப் 'பிரகாசம்' என்றும்,