உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

19

பயன்படுதற்கு வழிகாணுதல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் உண்டாயிற்று! அதனால்; "உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது” என்று கூறினார் நாயகர்.

யற்றமிழ் வல்ல நாராயணசாமியார் அடிகளுக்கு

ஓராசிரியர்!

சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் மற்றும் ஓராசிரியர்! நுண்மாண் நுழைபுல மறைமலையார்க்குக் கூடிவரும் காலம் தேடிநின்ற வாய்ப்புகள் இவை

கட்டுரை வன்மை :

மறைமலையார் பள்ளியில் பயின்றுவந்த காலத்திலேயே ஒரு பெரும் வேட்கை கொண்டார். தாம் பயின்ற கிறித்தவப் பள்ளியில் வகுப்பிலும் வெளியிலும் திருக்கோயிலிலுமாக நடத்தப்பெற்று வந்த கிறித்தவ மதக் கருத்துரைகள், வெளியீடுகள் கூட்டங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினார். அவ்வழிகளில் தாமும் தொண்டு செய்தல் வேண்டுமென உட்கொண்டார். அதனால் தம் மொத்த பள்ளி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, 'இந்து மதாபிமான சங்கம்' என ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் அதன் வழியாக மாணவர்களுக்குச் சமய அறிவும், மொழியறிவும், உரையாற்றும் திறமும் உண்டாக வழி கண்டார். ஒருவர் எதிர்காலம் எப்படி எப்படியெல்லாம் அமையும் என்பதற்கு முன்னோட்டம் போன்ற செய்திகளுள் ஒன்று ஈது; மற்றொன்று அவ் விளமைப் பருவத்திலேயே மறுப்புக் கட்டுரை எழுதிய அளவுடன் நில்லாமல் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மந்திரி என்னும் கிழமைத் தாளிலும், நாகை நீலலோசனி என்னும் கிழமைத் தாளிலும் வெளியிட்டுக் கட்டுரை வன்மையர் என்னும் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார். இனிக் கல்வி மணம் பரப்பிய மறைமலையாரின், காதல் மணம் குறித்துக் காண்போம்.