உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ் வளம் 228

திரு.வி.க. மறைமலையடிகள் மாண்பு. முன்னுரை "இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர்"

-

கா.சுப்பிரமணியனார்.

தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரை நடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ்பெற்ற மறைமலை யடிகளே.

-

பாவாணர் : வடமொழி வரலாறு முன்னுரை.

பொதுத் தமிழ் இலக்கியம் அனைத்தும் பொருந்தக் கற்று ஆங்கிலரும் வியக்கும் அழகிய ஆங்கில நடை கை வரப்பெற்று, ஆரிய மறைகளையும் ஆழ்ந்து ஆராய்தலுற்று, கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைந்து கிடந்த தனித்தமிழை மீட்டு எப்பொருள் பற்றியும் செந்தமிழில் எழுதவொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய மறைமலை அடிகள் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாக வைத்து எண்ணத் தக்க தனிப்பெரும் தகுதியுடையவர் ஆவர்

பாவாணர்; தமிழிலக்கிய வரலாறு. பக், 232

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்த. தமிழன் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழியில் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியதுபோல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒருசார் இளைஞர் வட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல் போலத் தமிழைத் தூயதாகக்

பல

காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் செய்தித்தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துகள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நான் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். அத் தவமகள் அடிச்சுவட்டை அன்புச்சுவடாகப்