உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சேலத்தில் இருந்து அரூர் வந்து அன்று இரு புலவருடன் கோட்டப்பட்டி சென்று இராத் தங்கி மறுநாட் காலையில்புள்ளி மான் கலைக்குட்டி 100 உரூபாவிற்கு வாங்கிக்கொண்டு அரூர் திரும்பினோம்.

அன்னையார் இறந்ததினாலும் இன்னும் மணமாகா மையாலும் வேறு துணையின்மையாலும் மகள் ஆறுதல் அடைதற்பொருட்டே அவள் அவாவியவாறு அத்துணை விலை கொடுத்து அதனை வாங்க நேர்ந்தது. மேலும் அவளுக்குரிய வீணையை 150 உரூபாவிற்கு விற்றுத்தான் அதனை வாங்கினோம். குட்டி இற்றை நிலைமையில் அவ்விலை பெறும். ஆயினும் 50 உரூபாவிற்கும் வேறிடத்தில் வாங்கலாம்.

குட்டியைப் பேரியங்கியில் ஒருவரும் ஏற்ற இசையாமையால் மொரப்பூர் சென்று புகைவண்டியில் ஏற்ற விரும்பினோம். ஆயின் குட்டி புதிய ஆட்களைக் கண்டு மருண்டு முரண்டு பண்ணியதால் புகைவண்டிக் கூட்டில் அடைப்பது சேதத்திற்கிடமாம் என்று தவறாய்ச் சொல்லி விட்டார். அதை நம்பி தி.வி.எசு, வில் (T.V.S) அனுப்புமாறு சீநிவாசன் இராசேந்திரன் என்னும் இரு புலவரிடமும் சொல்லி விட்டு இங்கு வந்தேன். தி.வி.எசு. வில் உயிரிகளைக் கடத்துவது இல்லையென்று அறிந்ததினாலும் என் மகள் உடனே கொண்டுவர விரும்பியதாலும் மறுநாளே அரூர் சென்று அடுத்தநாட்காலை அவ்விரு புலவருடனும் ஒரு மாணவருடனும் மொரப்பூர் கொண்டுபோய் நண்பகல் இணைப்பு விரைவானில் (Ling Empress) ஏற்றிவிட்டோம்.மாணவர் என்னுடன் இங்குத்துணைக்கு வந்து திரும்பினர்.

மான் நன்றாய்ப் பழகியிருக்கின்றது. ஆயின் ஒரு புள்ளிமான் பிணைக்குட்டி வேண்டும். இல்லாக்கால், கலைக்குட்டி பெரிதானவுடன் மலைநாடலாம். உடனே தாங்கள் ஏத்தாப்பூர் நண்பருக்கெழுதிக் கேட்க. ஆற்றூர்ச் சந்தைக்கு மான்குட்டி விற்பனைக்கு வருமென்று சேலத்தில் இருந்தபோது கேள்விப் பட்டேன். அங்கு வராவிடினும் அப்பக்கம் யாரும்வளர்த்து விற்கலாம். மும்மாதக் குட்டிாயியிருப்பது நல்லது. ஆறு மாதமாயினும் குற்றமின்று. 25 உரூபாவரை தரலாம். அரூர்ப்பக்கம் இப்போது ஒருவரிடத்துமில்லை” என்றெழுதினார்.

புள்ளிமான் பிணைக்குட்டி ஒன்று வேண்டும்என்னும் எண்ணம் பாவாணர்க்கு ஏன் எழுந்தது. ஏனெனில் கலைக்