84
கண்
31
இளங்குமரனார் தமிழ்வளம் - 31
செய்யப்பட்டது. அதன் பின்னர் வெளிப்பட்டுக் கும்பிடு போடும் நிலைக்கு வந்தது. திறப்பு விழாவும் அதன் கல்வெட்டும் பழைய கோயிலுக்கு உண்டாக்கிய புதுப் பொலிவுதான்! இப்படியே உள்ளே பார்.
- இங்கும் ஒரு 'திருமறைக் காடு'தானா?
பொன் : ஆம்! திறக்கப் பாடவும் ஒருவர் பிறக்க வேண்டும் போலும்! இவர் இறைவர்; இவர் குமரவேள்; இவர் கலைமகள்; இவர் உக்கிரப் பெருவழுதியார், கபிலர், பரணர், மாமூலர், பொன்முடியார்..
கண் : "வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன் முதற்கவி பாடிய முக்கட் பெருமான்”
முதலாம் புலவர்களை வணங்கிச் செல்வோம்.
ப்
பொன் : இச் சுற்றின் வட கீழ்க்கோடியில் இருப்பது 'மண்டப நாயகம்' என்னும் நூற்றுக் கால் மண்டபம். பெயரே இதன் சிறப்பை உணர்த்தும். இங்குள்ள சிற்பங்கள் நுண்ணியவை ; நுண்ணிய வேலைப்பாடு களும் உடையவை. இங்கே கூத்தபிரான் எழுந்தருளி யுள்ளார். இதனைக் கட்டி இங்கே இவரை எழுந்தருளச் செய்த பெரியவர் சின்னப்ப நாயக்கர் (கி.பி.1526) என்பார்.
கண்
பொன்
கண்
- இடம் பொருத்தமாகத் தேர்ந்துள்ளார்.
- ஆனால், ஞானசம்பந்தர் மண்டபம் இம் மண்டபம் கட்டியதற்குப் பின்னே கட்டப் பெற்றதால் அதனைக் கட்டியவரே இதற்குக் தக்கவாறு பொருத்தமாக அதனை அமைத்துள்ளார். கூத்தப் பிரானை அவர்கள் நேரே கண்டுகளித்துக் கொண்டிருக்க வைத்தவர் அவர்தாமே.
- சரிதான்.
பொன் : இனி முதற் சுற்றுக்குப் போகலாம். இவ் வாயிலின் வடபுறம் பழனியாண்டவர் உள்ளார். தென்புறம் திருவருள் பிள்ளையார் (அனுக்கிய விநாயகர்) உள்ளார். இவ் வாயில் காவலர் (துவாரபாலகர்) இருவரையும் பார். கோபுரத்தைப் பார்ப்பது போல் பார்க்க வைக்கின்றனர் இல்லையா! பீடம் நீங்கிய