வானவில்
அணிலார் செய்கை
வீட்டு முகப்பில் ஓர் ஓட்டுத் தாழ்வாரம்;
தாழ்வாரக் கைவளைக் கம்பின் மேல் ஊர்ந்து சென்றதோர் அணிற்குட்டி; நடக்க அறியா அணிற்குட்டியின் நடுங்கிய கால்கள் இடற
நழுவி வீழ்ந்து கீச்சிட்டது குட்டி;
சுவரில் மாட்டிய கண்ணாடிச் சட்டத் திடையே
மாட்டிக் கொண்டு கூச்சல் இட்டது;
குட்டியின் குரலை எட்டியிருந்து கேட்டன போலும்; இடப்பால் இருந்து தாவி வந்தது இனிய தாய் வலப்பால் இருந்து முட்டிமோதி முனைப்பாய் வந்தது தந்தை!
இரண்டும்கூடி ஏதோ பேசின;
கண்ணாடிச் சட்டக் கயிற்றுவழியே கடிதில் இறங்கின;
குட்டியை இரண்டும் கூடித் தூக்கிக்
கைவளை மேலே கருத்தாய்ச் சேர்த்தன;
குட்டி துயரம் குலைந்து போயது;
தந்தையும் தாயும் கொஞ்சிக் களித்தன;
இன்னதே அன்றோ குடும்பப் பண்பு! குட்டி குரல் தரப் பெட்டையும் ஆணும் பின்னிப் பிணைந்து பெருகிய அன்பால் உதவுதல் தானே உயர்ந்த குடும்பப் பாங்கு| துடிப்போர் தங்கள் துயர்க்குரல் கேட்டுத் துடித்துவந்து உதவுதல் தானே,
உலகக் குடும்பம் உய்தற்காம் வழியே! அணிலார் செய்கை அறிஞர் செய்கையாய் அமைதல் ஆகாதோ?
ஆலமர ஆசான்
ஆடிக்காற்றோ இல்லை;
அசையும் தென்றல் காற்றே அஃது!
107