இயைப்பு
பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்
155
புரிசை (கோட்டை) உயரம், 'மஞ்சுசூழ் வான்தோய்' என்பதால் விளங்கும். ஆன்றோர் அடக்கம், 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்' என்னும் குறளால் விளங்கும்.
'ஆன்றோர் அடக்கம் போல் புரிசைப் பொறி அடங்கின; அஞ்சி ஒதுங்காதார் யாவரவர்' என இயைக்க.
அகத்தோன் வீழ்ந்த புதுமை
(அகமதிலோன் புறத்துத் தாக்குவாரை வெல்ல விரும்புதல்)
26) தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்(து)
ஊக்க முடையார் ஒதுங்கியும் - கார்க்கீண்டு
இடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார்
அடிபுறத் தீடும் அரிது.
-பு.தி. 1340.
(25)
மேற்கோள்: இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை (தொல்.புறத். 13.நச்.).
பொருள்
விளக்கம்
முன்னெறி முட்டுதற்காகப் பின்னே பெயர்ந்து செல்லும் கடாவைப் போல், மதிற்கண் ஊக்கமிக் குடைய வீரர் பின்வாங்கி மறையவும் முகிற்கூட்டம் நெருங்குதலால் இடியெழுந்தாற்போல் எதிர்முட்டி வந்தனர்; ஆதலால் பகைவர்தம் அடியைப் பின்வாங்கித் தப்பிச் செல்லுதலும் இயலாதாம்.
—
'ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து' என்னும் குறளாட்சி எண்ணத் தக்கது. தகர் -ஆட்டுக்கடா; அதிலும் செம்மறி யாட்டுக்கடா. கடாப் பின்வாங்குவது போல் பின்வாங்கி முன்னேறக் கருதினார் என்க. கார் முகில். அவை நெருங்க இடிபுறப்படல் போல் இருவரும் முட்டினார் என்க. மாற்றார் - பகைவர். வண் அகத்துழிஞையான். அடிபுறத்தீடு அடியைப் பிறக்கிட்டுச் செல்லும் செலவு; பின் வாங்குதல். அன்றி, அடி பெயர்த்து வைத்தலும்
700