குறிப்பு
1.
2.
1.
4. இணைப்புப் பாடல்கள்
1
-
82
இப்பாடல்களுள் ஒன்றானும் இளம்பூரணரால் புறத்திணை யியலில் மேற்கோளாக ஆளப்பெற்றில என்பது கொள்ளத் தக்கது.
புறத்திரட்டின் 1438ஆம் பாடலாகிய 'உலகுபொதியுருவம்' என்னும் பாடல் பெரும்பொருள் விளக்கம் சார்ந்ததாகப் பொருள். புறத்.நச். உரைப்பதிப்பில் (கழகவெளியீடு 1947) காணப்படினும், புறத்திரட்டில் அக்குறிப்பு இல்லை. ஆதலால் இதனை முற்பகுதியில் சேர்க்காமல், இப்பகுதியில் சேர்க்கப்பட்டது (72)
வெட்சித் திணை
பாக்கத்து விரிச்சி
வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போன் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்புள் - உய்ந்த நிரையளவைத் தன்றியும் நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண்
- விரிச்சியை வியந்தது. -தொல்.புறத்திணையியல்.
3. நச்சினார்க்கினியர் மேற்கோள்.
ஒற்றின் ஆகியவேய்
2. ஒருவர் ஒருவர் உணராமற் சென்றாங்கு
இருவரும் ஒப்ப இசைந்தார் - வெருவர வீக்கும் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்கும் சரந்தெரிந்து கொண்டு
3. நெடுநிலையா யத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது