186
இளங்குமரனார் தமிழ்வளம் - 35
நூழில்
64. அறத்திற் பிறழ அரசெறியுந் தானை
மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்கால் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே
பல்படையார் பட்ட படி.
புறத். 17
வாகைத் திணை
ஓதல்
65. முறையோதின் அன்றி முளரியேன் அல்லேன் மறையோதி னானிதுவே வாய்மை - அறிமினோ ஈன்றாள் பயிற்றிருந்தே எம்மறையும் ஓதினான் சான்றான் மகனொருவன் தான்.
ஓதுவித்தல்
66. ஒத்த முயற்சியான் ஒத்து வெளிப்படினும் நித்திய மாக நிரம்பிற்றே - எத்திசையும் தாவாத அந்தணர் தாம்பயிற்றிக் காவிரிநாட டோவாத ஒத்தின் ஒலி.
புறத். 20.
வேட்டல்
67. ஒருமழுவோள் வேந்தன் ஒருமூ வெழுகால் அரசடு வென்றி யளவோ - உரைசான்ற ஈட்டமாம் பல்பெருந்தூண் எங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை.
ஈதல்
68. போர்வகை வாய்த்த புரவலரின் மேதக்கார்
ஏர்வாழ்நர் என்பதற் கேதுவாம் - சீர்சால் உரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்தம் நிரைகாத்துத் தந்த நிதி.
இது வேளாளர் நிரை காத்தது.
– புறத். 21.