260
இளங்குமரனார் தமிழ்வளம் - 38
(அ - ள்.) அனைத்தும் எல்லாம். அனைத்தும் ஆனாள்- எல்லாமாகியவள்; இறைமை இயல் உரைத்தது இது.
50. பரசிருக்கும் தமிழ்க்கூடல்
பழியஞ்சிச் சொக்கருடன்
அரசிருக்கும் அங்கயற்கண்
(தெ
ஆரமுதைப் பாடுவனே.
ரை ) புகழ் குடிகொண்ட தமிழ் மதுரையில் பழியஞ்சி என்னும் பெயர்கொண்ட சொக்கநாதருடன் இருந்து அரசு செலுத்தும் அங்கயற்கண்ணியாம் அரிய அமுதைப் பாடுவேன்.
—
(அ - ள்) பரசு புகழ்; கூடல் மதுரை; பழியஞ்சி என்றது இறைவர் பெயருள் ஒன்று. முன்னும் (5) கூறினார்.
வாழ்த்து
கொச்சகக் கலிப்பா
நீர்வாழி தென்மதுரை நின்மலனார் அருள்வாழி கார்வாழி அங்கயற்கண் கன்னிதிரு அருள்வாழி சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி பேர்வாழி அவன் செல்வம் பெரிதூழி வாழியவே.
(தெ-ரை.) நீர் வாழ்க; அழகிய மதுரையில் கோயில் கொண்ட குறையிலா இறைவர் திருவருள் வாழ்க; மழை வாழ்க; அங்கயற்கண் அம்மையின் திருவருள் வாழ்க; சிறந்தவை எல்லாம் வாழ்க; காஞ்சி மாநகர் ஆட்சி புரியும் திருமலை பூபதி என்பான் வாழ்க; அவன் புகழ் வாழ்க; அவன் செல்வம் காலமெல்லாம் வாழ்வதாக.
(அ - ள்.) நின்மலர் - களங்கமில்லாத இறைவர்;கார் மேகம், மழை ;சீர் - சிறப்பு; கச்சி -காஞ்சி;திருமலை பூபதி - வள்ளல் பெயர்; பேர் - பெருமை ; ஊழி -நெடியதொரு கால
எல்லை.