மீனாட்சியம்னை குறம்
259
(அ - ள்.) வெவ்விடம் - கொடிய நஞ்சு; விரை மணம்; இறைவன் நஞ்சுண்ட போது அது கண்டத்தளவில் நிற்க நிறுத்தியவள் அம்மை என்பது கொண்டு கூறியது. 'நஞ்சை அமுதாக்கும்' என்றது நயம்.
47. வைத்தபகி ரண்டமெனும்
மணற்சிற்றில் இழைத்திழைத்தோர் பித்தனுடன் விளையாடும்
பெய்வளையைப் பாடுவனே.
(தெ-ரை.) அடுக்கப்பட்ட அண்டங்களாகிய மணற்சிறு வீடுகளைக் கட்டிக் கட்டிப் பெருமானுடன் விளையாடும் பலவாகப் பெய்த வளையல் அணிந்த அம்மையைப் பாடுவேன்.
-
(அ - ள்.) பகிரண்டம் - பேரண்டம்; சிற்றில் - சிறுவீடு; இழைத்து கட்டி; பித்தன் சிவபெருமான். அண்டமும் பகிரண்டமும் படைத்தல் இறைவன் இறைவியர்க்குச் சிறுவீடு கட்டும் சிறுவிளையாட்டு என்றது இது.
48. இலைக்குறியும் குணமுநமக்(கு)
என்பார்க்கு வளைக்குறியும்
முலைக்குறியும் அணிந்திட்ட
மொய்குழலைப் பாடுவனே.
(தெ-ரை) வடிவும் குணமும் நமக்கு இல்லை என்பவராகிய இறைவர்க்கு வளையல் குறியும் மார்புக் குறியும் பதித்த திரண்ட கூந்தல் உடையவளைப் பாடுவேன்.
(அ - ள்.) இலை என்பதைக், 'குறி' 'குணம்' இரண்டற்கும் கூட்டுக. குறி - பெயருமாம்."ஓருருவம் ஒருநாமம் ஒன்றுமில்லார்" என்றது கருதுக. பதினொன்றாம் பாடலைப் பார்க்க.
49. ஒன்றாகி அனைத்துயிர்க்கும்
உயிராகி எப்பொருளும்
அன்றாகி அவையனைத்தும்
ஆனாளைப் பாடுவனே.
(தெ-ரை.) ஒரு பொருளாகியும், எல்லா உயிர்களுக்கும் உயிராகியும் எப்பொருளும் இல்லாததாகியும், எல்லாப் பொருளும் தானாகியும் நிற்கும் இறைவியைப் பாடுவேன்.