உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்

மைதானத்துக்கு அருகே உள்ள புல் தரையில் அவர் நடந்து கொண்டிருந்தார். தினந்தோறும் மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள்.

<<

"இன்று பத்து நிமிஷம் தாமதித்து விட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும்."என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரைக்கச் சொன்னார்.

பிரார்தனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும் சில கஜ தூரம்தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும்போது அந்த மர மேடை மேலேயே உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோரும் எழுந்து நின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா மனு இருவருடைய தோள் களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார்.

அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதரி அவன் தோன்றினான். ஆனால் தங்கள் நேரம் கடந்து விட்டதால் அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றாள். அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒருபுறம் தள்ளினான். அவள் உருட்டி அடித்துக் கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மனிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிஸ்டல் ஒன்றால் மூன்று முறை

சுட்டான்.