புறப்பொருள்
அகத்தடி உய்யாமை அஞ்சுடர்வா ளோச்சி மிகத்தடிந்தார் மேனின் றவர்.”
அறிவன்வாகை:
க
227
உலகோர் தனது புகழைக் கூறுமாறு . இறப்பு, நிகழ்வு, எதிர் வென்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறும் அறிவனுடைய தன்மையைச் சொல்லியது அறிவன் வாகை என்னும் துறையாம்.
(எ.டு)
"இம்மூ வுலகின் இருள்கடியும் ஆய்கதிர் போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்- தம்மின் உறழா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியோர்வாய்ச் சொல்.'
அறுவகைப் பட்ட பார்ப்பனப்பக்கம்:
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
என்ற ஆறும் பார்ப்பனர்க்கு உரிய கூறுபாடு.
(எ.டு)
"முறையோதி னன்றி முளரியோ னல்லன்
மறையோதி னானிதுவே வாய்மை-யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம் மறையு மோதினான் சான்றான் மகனொருவன் றான்
இஃது ஓதல்.
'எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு”
இஃது ஓது வித்தற் சிறப்பு.
“ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ-னீந்த மழுவா ணெடியோன் மயக்கஞ்சால் வென்றி வழுவாமற் காட்டிய வாறு
இஃது வேட்பித்தல்.