232
(எ.டு)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
“இன்னா சொகினம் இசையா விரிச்சியும்
அன்னா அலம்வருமென் ஆருயிரும்-என்னாங்கொல் தொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு.
ஆனந்தப்பையுள்:
மூங்கில் போன்ற தோளினையுடைய தலைவி தன் கணவன் இறந்து பட துன்பம் மிக மெலிந்து வருந்தியது ஆனந்தப் பையுள் என்னும் துறையாம்
(எ.டு)
“புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை திகழொளிய மாவிசும்பு சேர-இகழ்வார்முன் கண்டே கழிகாதல் இல்லையாற் கைசோர்ந்தும் உண்டே அளித்தென் உயிர்.
இயல்மொழி வாழ்த்து: அ
இரவலன் புரவலனிடம் இன்ன வள்ளல் இத்தகைய பொருளைக் கொடுத்தார். நீயும் அவர் போன்று எமக்கு வழங்கு வாயாக எனக் கூறுவது இயல் மொழி வாழ்த்து என்னும் துறையாம்.
(எ.டு)
66
'முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை
இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும் கரவாமல் ஈகை கடன்.
இயல் மொழிவாழ்த்து : -ஆ
மயக்கமில்லாத பெரிய புகழினையும் குதிரை பூட்டிய தேரினையும் உடைய அரசனது தன்மையினை எடுத்துக் கூறினும் இயல் மொழி வாழ்த்து என்னும் துறையாம்.
(எ.டு)
66
ஒள்வாள் அமருள் உயிரோம்பான் தானீயக்
கொள்வார் நடுவண் கொடையோம்பான்-வெள்வாள்