(எ.டு)
புறப்பொருள்
"மற்கொண்ட திண்தோள் மறவேல் நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த-எற்காணப் பெய்களி யானைப் பிணரெருத்திற் கண்டுயான் கைதொழுதேன் தான்கண் டிலன்.'
புகழ்ந்தனர் பரவல்:
303
நிலவுலகத்தின்கண் யாம் இன்னதொரு பேற்றைப் பெறு வோமாக என்று சொல்லித் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி வாழ்த்துதல் புகழ்ந்தனர் பரவல் என்னும் துறையாம்.
(எ.டு)
66
‘சூடிய வான்பிறையோய் சூழ்கடலை நீற்றரங்கத்து
ஆடி அசையா அடியிரண்டும் -பாடி
உரவுநீர் ஞாலத் துயப்போக என்று
பரவுதும் பல்காற் பணிந்து.
புகழ்ச்சினர் பணிதல்:
விளங்கிய புகழினையுடைய
இறைவனை
இவ்வுலக
இன்பங்களைப் பெறக் கருதி வாழ்த்தியது புகழ்ச்சினர் பணிதல் என்னும் துறையாம்.
(எ.டு)
66
'ஆடல் அமர்ந்தான் அடியடைந்தார் என்பெறார்
ஓடரி உண்கண் உமையொருபாற் -கூடிய
சீர்சால் அகலத்தைச் செங்கண் அழல்நாகம் தாராய்த் தழுவப் பெறும்.
புணரா இரக்கம்:
وو
தலைவி தலைவனது தன்மையினை உணராமையானே தோன்றிய துன்பம் மேன்மேலும் பெருக. அத்தலைவியைப் புணராமையானே உண்டான துன்பத் தோடே தனிமையாகத் தங்கியது புணரா இரக்கம் என்னும் துறையாம்.
(எ.டு)
"இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம்
புணராமற் பூசல் தரவும்- உணராது