புறப்பொருள்
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு.'
மறக்களவழி:
முழவு போன்ற தோளினையுடைய
மன்னனை
321
உழு
தொழிலையுடைய வேளாளனாக உருவகித்தது மறக்கள வழி
என்னும் துறையாம்.
(எ.டு)
66
“அஞ்சுவரு தானை அமர்என்னும் நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்- செஞ்சுடர்வேற்
பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் நல்கான்
எங்கட் கடையா இடர்."
மறக்காஞ்சி: (அ)
வஞ்சியார் அஞ்சும்படி காஞ்சி வேந்தன் போரைச் செலுத்தியது மறக்காஞ்சி என்னும் துறையாம்.
(எ.டு)
66
கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்
பருந்தோ டெருவை படர- அருந்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம்."
மறக் காஞ்சி: (ஆ)
காஞ்சி மறவன் பகைவர் உயர்ச்சியைப் பொறானாய்த் தன் விழுப்புண்ணைப் பிளந்து உயிர் நீத்தலும் மறக்காஞ்சி என்னும் துறையாம்.
(எ.டு)
66
‘நகையம ராய நடுங்க நடுங்கான்
தொகையம ரோட்டிய துப்பிற்- பகைவர்முன் நுங்கிச் சினவுதல் நோனான் நுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண்
மறக்காஞ்சி: (இ)
99
நல்ல குணம் உறுவிலையாகப் பெறுகின்ற பகுதியாராய்ந்து பெறுதற்குப் பட்ட விழுப் புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலை